Sunday, May 13, 2012

மே மாத மல்லிகை மகள் மாத இதழில் நான் எழுதிய கவிதை.


நன்றி : மல்லிகை மகள், மே இதழ்:

பழைய நிலவு 
சண்டையின் போதெழுந்த
சுருக்கென்ற கோபத்தில்
வெளியேறிச் சென்று
தனெக்கெனத் துணையாய்
என்றோ ஒப்புமையிட்ட
பழைய நிலவொன்றைக்
கையில் வைத்திருந்தாள்
பக்கத்திலேயே
சில மான்களும், மீன்களும்
பறவைகளுமென.
கடந்து வந்த காலங்களில்
அவை மட்டும் அப்படியே
மாறாமல் இருக்கிறது
அவளின் நினைவேட்டில்.





ராமலக்ஷ்மி அவர்களின் கவிதையும் அதே இதழில் வெளி வந்திருக்கிறது.  அவருக்கும் வாழ்த்துகள்


No comments:

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்