Friday, January 27, 2012

சிறகசைக்கும் உயிர் பறவை - அதீதம்

சில்லென்று ஊடுறுவும்
உருவமற்ற உன் உணர்வு,
மெல்ல என்னை வெளியே
இழுக்கிறது.

இழுத்துக் கட்டிய தேகமென்று
எத்தனை முறை பார்த்திருப்பேன்
எத்தனை பேர் வியந்திருப்பார்
இன்று முழுதாய் பார்க்கப் போகிறேன்
என்னை நானே
வெளியிலிருந்து.

பனிக்கட்டியாய் குளிர்ந்த
உன் கைகள் பற்றி மேலெழுகிறேன்
என் தேகமும் குளிரட்டுமென

ஒற்றைக் கூட்டின் சிறைவாசம் விடுத்து
பரந்து விரிகிறேன்
விழிப்புலன்களுக்கெட்டா தேசத்தில்
இருந்தும் இல்லா பெருவெளியில்
ஏகாந்தம் தேடி
எனக்கான இடம்
வேண்டுமென!

0 comments:

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்