பார்க்கும் இடமெல்லாம்அவள் தொடாத
பொம்மைகளும் புத்தகங்களும்
வரிசை மாறாமல்
இரண்டு நாள் பிரிவு தான்
இருந்தும் அடிக்கடி
சிந்தனை செயலிழக்கிறது
நினைவில் காடு கொண்ட மிருகமாய்
அவளைக் கொண்டு
அலைகிறேன்.
நாளை வீடு திரும்பும்
என் மகளை
எதிர் நோக்கி.....
நன்றி : அதீதம் (சுட்டி )
No comments:
Post a Comment